தினமும் 10 நிமிடங்கள் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டால் உடல் மற்றும் மனநலத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுகுபா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கண்ட ஆய்வில் நாள் ஒன்றுக்கு 10 நிமிடம் மிதமாக அல்லது தீவிரவாக ஓடுதல் உடல், மனநலத்தை மேம்படுத்தும் என்று கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வு விஞ்ஞான அறிக்கைகள் (scientific Reports) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
முந்தைய ஆய்வுகளில், சைக்கிள் ஓட்டுதல் பெரும்பாலும் சிறந்த உடற்பயிற்சி என்றும் கூறப்பட்டிருந்தது. எனினும், ஓடும்போது உடலை நாமே தனித்து இயக்குவதால் உடல் முழுவதுமே புத்துணர்வு பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓடுவதால் நரம்பியல் செயல்பாடுகள் அதிகரிக்கும், உடல் உறுப்புகள் சிறப்பாக இயங்கும், தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
நம்முடைய உடல் ஒவ்வொரு செயலில் ஈடுபடும்போது மூளையின் செயல்பாடு மாறுபடுவதையும் ஆய்வாளர்கள் இதில் உறுதி செய்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக ஓடுவது மனிதர்களின் பரிமாண வளர்ச்சியில் பல நன்மைகளை வழங்கக்கூடியது என்பதையும் கூறியுள்ளனர்.